35. செஞ்சடைக் கற்றை - பாடல் 8
வேதங்கள் ஓதுபவராய், மழுப்படையைக் கையினில்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM
பாடல் 8
மறையனார் மழு ஒன்றேந்தி மணிநிலா எறிக்கும் சென்னிச்
இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
Advertisement
சிறை கொள் நீர் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
அறைகழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடுமாறே
விளக்கம்
சிறை = நீரினைத் தடுத்து வயல்களுக்கு நீர் பாய்ச்சும் மடை. தில்லையின் நீர் வளத்தைக் குறிக்கின்றது.
பொழிப்புரை
வேதங்கள் ஓதுபவராய், மழுப்படையைக் கையினில் ஏந்திய சிவபெருமானின் நெற்றியில் சந்திரனின் ஒளி வீசுகின்றது; எனது பிரானாகிய இறைவன், அவரைப் புகழ்ந்து பாடும் அடியார்களின் துயர்களைத் தீர்ப்பார். நீர்ப்பாசனத்திற்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படும் அளவுக்கு நீர் வளம் நிறைந்த தில்லை சிற்றம்பலத்தே, தனது கழல்கள் ஒலி செய்ய, சிவபிரான் அனலிடை நின்று நடமாடுகின்றார்.