முகப்பு
தினம் ஒரு தேவாரம்

35. செஞ்சடைக் கற்றை - பாடல் 8

வேதங்கள் ஓதுபவராய், மழுப்படையைக் கையினில்

Updated On : 2 செப்டம்பர், 2016 at 5:28 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM

பாடல் 8

மறையனார் மழு ஒன்றேந்தி மணிநிலா எறிக்கும் சென்னிச்

இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்

Advertisement

சிறை கொள் நீர் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே

அறைகழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடுமாறே

விளக்கம்

சிறை = நீரினைத் தடுத்து வயல்களுக்கு நீர் பாய்ச்சும் மடை. தில்லையின் நீர் வளத்தைக் குறிக்கின்றது.

பொழிப்புரை

வேதங்கள் ஓதுபவராய், மழுப்படையைக் கையினில் ஏந்திய சிவபெருமானின் நெற்றியில் சந்திரனின் ஒளி வீசுகின்றது; எனது பிரானாகிய இறைவன், அவரைப் புகழ்ந்து பாடும் அடியார்களின் துயர்களைத் தீர்ப்பார். நீர்ப்பாசனத்திற்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படும் அளவுக்கு நீர் வளம் நிறைந்த தில்லை சிற்றம்பலத்தே, தனது கழல்கள் ஒலி செய்ய, சிவபிரான் அனலிடை நின்று நடமாடுகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.