முகப்பு
தினம் ஒரு தேவாரம்

45. தெண்திரை தேங்கி ஓதம் - பாடல் 9

கரிய மலையினைப் போன்றும்

Updated On : 10 டிசம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:20 AM

கருவரை அனைய மேனிக் கடல் வண்ணன் அவனும்
                                                                             காணான்
திருவரை அனைய பூமேல் திசைமுகன் அவனும் காணான்
ஒருவரை உச்சி ஏறி ஓங்கினார் ஓங்கி வந்து
அருமையில் எளிமை ஆனார் அவர் வலம்புரவனாரே

விளக்கம்

கருவரை = கரிய மலை. திருவரை = திருமகள் தங்கும் இடமாக கருதப்படும். அருமை = அரிய தன்மை. ஒரு வரை = ஒப்பற்ற மலையாகிய கயிலை மலை.

Advertisement

பொழிப்புரை

கரிய மலையினைப் போன்றும் கடலினைப் போன்றும் மேனி நிறத்தினை உடையவனாகிய திருமால் காணமுடியாதபடி நின்றவன் சிவபெருமான்.

திருமகள் உறையும் இடம் என்று கருதப்படும் தாமரை மலரில் அமர்பவனாகிய பிரமனும் காணமுடியாதபடி நின்றவன் சிவபெருமான். ஒப்பற்ற மலையென்று கருதப்படும் கயிலை மலையின் உச்சியில் மேம்பட்ட நிலையில் விளங்குபவன் சிவபெருமான். இத்தனை அரியவனாக இருக்கும் சிவபெருமான், அடியார்களுக்கு மிகவும் எளியவனாகத் திகழும் தலம் வலம்புரம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.