முகப்பு
தினம் ஒரு தேவாரம்

15. கோணல் மாமதி - பாடல் 3

தன்னைப் பற்றுக்கோடாகக் அடியார்களின் பிறவிப் பிணியினை நீக்கி அருள் புரிபவர் சிவபெருமான்.

Updated On : 9 பிப்ரவரி, 2016 at 2:20 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:01 PM

பாடல் 3

உற்றவர் தம் உறுநோய் களைபவர்
பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர்
சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம்
கற்கில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே

<br /><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">உற்றவர் = தம்மைப் பற்றுகோடாக அடைந்த அடியார்கள். பெற்றம் = எருது. பிறங்கு = நன்றாக விளங்கும்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">தன்னைப் பற்றுக்கோடாகக் அடியார்களின் பிறவிப் பிணியினை நீக்கி அருள் புரிபவர் சிவபெருமான். எருதினை வாகனமாகக் கொண்டுள்ள அவரது சடை பொலிவுடன் விளங்குகின்றது. கெடில நதியால் சூழப்பட்ட திருவதிகை வீரட்டத்தில் உறையும் அவரின் பெருமைகளை கற்றால் தான் எனது கண்கள் துயில் கொள்ளும். எனவே, அடியேன் அவரது பெருமைகளைக் கற்கின்றேன்.</p><p align="JUSTIFY"> </p>

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.