முகப்பு
தினம் ஒரு தேவாரம்

15. கோணல் மாமதி - பாடல் 7

இடுப்பிலே கோவண ஆடையினை அணிந்தவனும், தான் வரும் வழியெல்லாம் தனது நீரலைகளைப் பாய்ச்சி வளம் கொழிக்கும் கெடில நதிக் கரையில்

Updated On : 15 பிப்ரவரி, 2016 at 4:00 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:03 PM

பாடல் 7

அரையார் கோவண ஆடையன் ஆறெலாம்
திரையார் ஒண்புனல் பாய் கெடிலக்கரை
விரையார் நீற்றன் விளங்கு வீரட்டம்
கரையேன் ஆகில் என் கண் துயில் கொள்ளுமே
 

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">கரைதல் = சொல்லுதல். அரையார் = இடுப்பில் பொருந்திய. ஆறு = வழி. விரையார் = நறுமணம் உடைய.</p><p align="JUSTIFY"><strong><br />பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">இடுப்பிலே கோவண ஆடையினை அணிந்தவனும், தான் வரும் வழியெல்லாம் தனது நீரலைகளைப் பாய்ச்சி வளம் கொழிக்கும் கெடில நதிக் கரையில் அமர்ந்தவனும், நறுமணம் வீசும் திருநீற்றினை உடலில் பூசியவனாக விளங்குபவனும் ஆகிய திருவதிகை வீரட்டானத்துச் செல்வனை, புகழ்ந்து சொல்லாவிடில் எனது கண்கள் உறக்கம் கொள்ளாது. எனவே நான் தினமும் அவனது புகழ்களை சொல்லுவேன்.</p>

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.