16. எட்டு நாண்மலர் கொண்டு - பாடல் 7
சிவ ஆகமங்களில் குறிப்பிட்டவாறு சிறந்த மலர்களை, பெருமானது திருவடிகளில் இட்டு வணங்கி வழிபடும் அடியார்களை,
பாடல் 7
உரை செய் நூல் வழி ஒண்மலர் இட்டிடத்
திரைகள் போல் வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்து இழி கெடிலக்கரை
விரைகள் சூழ்ந்து அழகாய வீரட்டரே
<strong><br /><br />விளக்கம்</strong></p><p align="JUSTIFY">வரை = மலை. விரைகள் = நறுமணம் வீசும் பொருட்கள். உரை செய் நூல் = சிவ ஆகமங்கள். திரைகள் = அலைகள்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">சிவ ஆகமங்களில் குறிப்பிட்டவாறு சிறந்த மலர்களை, பெருமானது திருவடிகளில் இட்டு வணங்கி வழிபடும் அடியார்களை, தொடர்ந்து வரும் கடலைகள் போன்று துரத்தி துன்புறுத்தும் வினைகளைத் தீர்ப்பவர் சிவபெருமான். எனவே உயர்ந்த மலையிலிருந்து நறுமணம் வீசும் பல பொருட்களைக் கொண்டுவந்து குவிக்கும் கெடில நதியினால் சூழப்பட்டுள்ள அதிகை நகரில் உரையும் வீரட்டரை, எட்டு மலர்களைக் கொண்டு வழிபட்டு பயன்பெறுவீர்களாக.</p>
Advertisement