17. மாமாத்தாகிய மாலயன் - பாடல் 5
நறுமணம் கமழும் குரா மலர்கள் பொருந்திய கூந்தலை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமான்,
பாடல் 5
குரா மன்னும் குழலாள் ஒரு கூறனார்
அரா மன்னும் சடையான் திரு ஆமாத்தூர்
இராமனும் வழிபாடு செய் ஈசனை
நிராமயன் தனை நாளும் நினைமினே
</p><p align="JUSTIFY"><strong><br />விளக்கம்</strong></p><p align="JUSTIFY">இந்த தலத்தின் அருகே உள்ள வட்டப்பாறை என்ற இடத்தில் தான் இராமனும் சுக்ரீவனும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதாக உறுதி பூண்டனர் என்று நம்பப்படுகின்றது. இந்த திருக்கோயில் தலபுராணம், இராமபிரான் சிவபெருமானை வணங்கியதாக கூறுகின்றது, அந்த தகவல் தான் அப்பர் பிரானால் இந்த பாடலில் கொடுக்கப்பட்டுள்ளது, அரா = பாம்பு. நிராமயன் = நோய் அற்றவன்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">நறுமணம் கமழும் குரா மலர்கள் பொருந்திய கூந்தலை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமான், பாம்பு நிலையாக இடம் பெரும் சடையினை உடையவன்: அவன், திருவாமாத்தூர் தலத்தில் இராமபிரானால் வணங்கப் பெற்றவன்; இயற்கையாகவே, பிறப்பு இறப்பினைக் கடந்தவன் என்பதால், பிறவிப் பிணி என்ற நோய் அற்றவனாக காணப்படும் இறைவனை, தினமும் நினைத்து வழிபாடு செய்வீர்களாக.</p>
Advertisement