17. மாமாத்தாகிய மாலயன் - பாடல் 9
குண்டர்களும், மயிற்பீலிகளை எப்போதும் வைத்திருப்பவர்களும், நற்குணங்கள் ஏதும் இல்லாதவர்களும், தங்களது அறிவினை
பாடல் 9
குண்டர் பீலிகள் கொள்ளும் குணமிலா
மிண்டரோடு எனை வேறு படுத்து உய்ய
கொண்ட நாதன் குளிர் புனல் வீரட்டத்து
அண்டனார் இடம் ஆமாத்தூர் காண்மினே
</p><p align="JUSTIFY"><strong><br />விளக்கம்</strong></p><p align="JUSTIFY">அண்டனார் = உலக முதல்வன். மிண்டர் = வம்பு செய்பவர், வெறும் உடல் பலத்தினை மட்டும் உடைய குண்டர்கள். எவராலும் தீர்க்கமுடியாத சூலை நோயினைக் கொடுத்து, தான் சமணர்களை விட்டு பிரிவதற்கு வழி வகுத்த இறைவன் என்றும், அடைக்கலமாக வந்த தான் உய்வதற்கும் வழி வகுத்த இறைவன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">குண்டர்களும், மயிற்பீலிகளை எப்போதும் வைத்திருப்பவர்களும், நற்குணங்கள் ஏதும் இல்லாதவர்களும், தங்களது அறிவினை வளர்த்துக் கொள்ளாமல் உடலை வளர்த்தவர்களும் ஆகிய சமணர்களுடன் பழகி வந்த அடியேனை, அவர்களிடமிருந்து பிரித்து, பின்னர் ஆட்கொண்டு, அடியேன் உய்வதற்கு வழி வகுத்துக் கொடுத்தவன், குளிர்ந்த தண்ணீரினை உடைய கெடில நதியினால் சூழப்பட்ட வீரட்டத்து இறைவன் ஆவார். அவர்தான் உலகத்தின் நாயகன். அவர் உறையும் இடமாகிய ஆமாத்தூரைச் சென்று காண்பீர்களாக.</p>
Advertisement