முகப்பு
தினம் ஒரு தேவாரம்

79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 2

சிவந்த மேனியை

Updated On : 12 நவம்பர், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:36 PM

பாடல் 2:

    கவள மா களிற்றின் உரி போர்த்தவர்
    தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர்
    திவள வானவர் போற்றித் திசை தொழும்
    பவள மேனியர் பாலைத் துறையரே

விளக்கம்:

கவளம்=பெரிய சோற்று உருண்டை: யானைக்கு வைக்கப்படும் உணவு உருண்டைகள் பெரிய அளவில் இருக்கும் என்பதை உணர்த்த கவள மா களிறு என்று இங்கே கூறப்பட்டுள்ளது. தவள=வெண்மை, வடமொழிச்சொல்: திவள வானவர்=சிறப்பாக விளங்கும் தேவர்கள்.

பொழிப்புரை:

பாலைத்துறையில் உறையும் சிவபெருமான், பெரிய சோற்றுருண்டைகளை உண்டு வாழும் வலிமை மிக்க யானையின் தோலை உரித்தவர்: வெண்மையான பற்களைக் கொண்டு, வெண்ணகை வீசும் பார்வதி அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவர்: சிறப்பாக விளங்கும் தேவர்களும் சிவபெருமான் இருக்கும் திசை நோக்கித் தொழுகின்றார்கள். அவர் பவளம் போன்று சிவந்த மேனியை உடையவர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.