79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 4
பேய்க்கணங்களும்
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:37 PM
பாடல் 4:
நீடு காடு இடமாய் நின்ற பேய்க்கணம்
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே
ஆடினார் அழகாகிய நான்மறை
பாடினார் அவர் பாலைத் துறையரே
விளக்கம்:
நீடு காடு=நீண்ட காடு: ஆர்க்க=ஆரவாரிக்க:
பொழிப்புரை:
நீண்ட காட்டினைத் தாங்கள் வாழும் இடமாகக் கொண்ட பேய்க்கணங்களும், கூடி நின்ற பூத கணங்களும், மிகுந்த ஆரவாரத்துடன் ஆட, அவைகளின் ஆடலுக்கு இணைந்து ஆடும் சிவபெருமான். அழகான நான்மறைகளை பாடியவாறே ஆடுகின்றார். அத்தகைய திறமை வாய்ந்த அவர் பாலைத்துறை தலத்தில் உறைகின்றார்.
Advertisement