79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 9
பிறைச் சந்திரனை
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:39 PM
பாடல் 9:
மேகம் தோய் பிறை சூடுவர் மேகலை
நாகம் தோய்ந்த அரையினர் நல்லியல்
போகம் தோய்ந்த புணர்முலை மங்கையோர்
பாகம் தோய்ந்தவர் பாலைத் துறையரே
விளக்கம்:
மேகலை=பெண்கள் இடுப்பினில் அணியும் நகை. மாதொரு பாகனாக விளங்கும் பெருமான் என்பதால் மேகலை அணிந்தவராக காணப்படுகின்றார்.
பொழிப்புரை:
மேகத்தினிடையே உலாவும், பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவர் சிவபெருமான். மேகலை அணியுடன் நாகங்கள் சூழ்ந்த இடுப்பினை உடையவர் அவர். நல்ல இயல்பினையை உடையவளும், இன்பத்தினை அளிக்கக்கூடிய மார்பகங்களை உடையவளும் ஆகிய உமையம்மையைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்து இருக்கும் சிவபெருமான், திருப்பாலைத்துறையில் உறைகின்றார்.
Advertisement