முகப்பு
தினம் ஒரு தேவாரம்

80. ஒன்று கொலாம் - பாடல் 2

பெண் ஆண் என்று

Updated On : 23 நவம்பர், 2017 at 10:22 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:41 PM

பாடல் 2:

    இரண்டு கொலாம் இமையோர் தொழு பாதம்
    இரண்டு கொலாம் இலங்கும் குழை பெண் ஆண்
    இரண்டு கொலாம் உருவம் சிறு மான் மழு
    இரண்டு கொலாம் அவர் எய்தினதாமே

விளக்கம்:

தோடுடைய செவியன் என்று ஞானசம்பந்தப் பெருமான் பாடியதற்கு ஏற்ப, ஒரு காதினில் குழையையும் மற்றொரு காதினில் தோட்டினையும் அணிகலனாக கொண்டவர் சிவபெருமான். இந்த செய்தியையே அப்பர் பிரான் இங்கே இரண்டு கொலாம் இலங்கும் குழை என்று குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

இமையோர் தொழும் சிவபிரானின் பாதங்கள் இரண்டு. அவரது காதினில் அணிந்திருக்கும் ஆபரணம் தோடு, குழை என்று இரண்டு வகையானது. அவரது உருவம் பெண் ஆண் என்று இரண்டு தன்மையையும் கொண்டது. அவர் திருக்கைகளில் ஏந்தியிருக்கும் பொருள்கள் இரண்டு, மான் மற்றும் மழு ஆகும். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.