முகப்பு
தினம் ஒரு தேவாரம்

80. ஒன்று கொலாம் - பாடல் 3

நெற்றிக்கண்ணையும் சேர்த்து

Updated On : 24 நவம்பர், 2017 at 9:37 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:42 PM

பாடல் 3:

    மூன்று கொலாம் அவர் கண் நுதல் ஆவன
    மூன்று கொலாம் சூலத்தின் மொய்யிலை
    மூன்று கொலாம் கணை கையது வில் நாண்
    மூன்று கொலாம் புரம் எய்தனதாமே

பொழிப்புரை:

அவரது நெற்றிக்கண்ணையும் சேர்த்து சிவபிரானின் கண்கள் மூன்று. அவர் ஏந்தியிருக்கும் சூலம் மூன்று இலைகளைக் கொண்டது. அவர் கையில் திகழும் வில், மூன்று வேறு வேறு பொருட்களை (வில்லாக இருக்கும் மேருமலை, நாணாகத் திகழ்வது வாசுகி பாம்பு, அம்பாக இருப்பது திருமால் என்று மூன்று பொருட்களை) தனது அங்கங்களாக உடையது. அந்த வில்லில் உள்ள அம்பு எய்யப்பட்டது மூன்று புரங்களை நோக்கி.   . 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.