முகப்பு
தினம் ஒரு தேவாரம்

80. ஒன்று கொலாம் - பாடல் 6

சூடியிருக்கும் மாலை

Updated On : 27 நவம்பர், 2017 at 10:33 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:43 PM

பாடல் 6:

    ஆறு கொலாம் அவர் அங்கம் படைத்தன
    ஆறு கொலாம் அவர்தம் மகனார் முகம்
    ஆறு கொலாம் அவர் தார் மிசை வண்டின் கால்
    ஆறு கொலாம் சுவை ஆக்கினதாமே

 
பொழிப்புரை:

சிவபிரான் படைத்த வேதத்தின் அங்கங்கள், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் ஆகிய ஆறு. அவரது மகனார் முருகனின் முகங்கள் ஆறு. அவர் சூடியிருக்கும் மாலையைச் சூழும் வண்டுகளின் கால்கள் ஆறு. அவரால் ஏற்படுத்தப்பட்ட சுவைகள், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என்னும் ஆறு வகையில் அடங்குவன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.