முகப்பு
தினம் ஒரு தேவாரம்

80. ஒன்று கொலாம் - பாடல் 7

இறைவன் படைக்கும்

Updated On : 28 நவம்பர், 2017 at 10:12 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:44 PM

பாடல் 7:

    ஏழு கொலாம் அவர் ஊழி படைத்தன
    ஏழு கொலாம் அவர் கண்ட இருங்கடல்
    ஏழு கொலாம் ஆளும் உலகங்கள்
    ஏழு கொலாம் இசை ஆக்கினதாமே

விளக்கம்:

ஒவ்வொரு ஊழிக் காலத்தின் தொடக்கத்திலும் சிவபெருமானால் படைக்கப்படும் உயரினங்கள், தாவரம், நீரில் வாழ்வன, ஊர்வன, நடப்பன, பறப்பன, மனிதன், தேவர் ஆகிய ஏழு வகைகளில் அடங்கும். சிவபிரானால் தோற்றுவிக்கப்பட்ட கடல்கள் ஏழு; அவையாவன, உப்பு, தேன், தயிர், பால், நெய், கருப்பஞ்சாறு, மற்றும் நீர்.  அவர் ஆளுகைக்கு உட்பட்ட கீழ் மேல் உலகங்கள் ஏழு ஆகும். அவையாவன; உலகங்கள்: பூலோகம், புவர்லோகம், சுவர்கலோகம், ஜனலோகம், தவலோகம், மகாலோகம் மற்றும் சத்யலோகம். கீழேழ் உலகங்கள், அதலம், விதலம், சுதலம், நிதலம். தராதலம், இரசாதலம், பாதாளம். ஏழு வகையான இசைகள், குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். தமிழ் மொழியில் இவ்வாறு அழைக்கப்படும் இந்த ஏழு இசைகள், வடமொழியில் சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாரம் என்று அழைக்கப்படுகின்றன. சுருக்கமாக சரிகமபதநி என்று கூறுவார்கள்

ஏடுடைய மேல் உலகோடு ஏழ் கடலும் சூழ்ந்த நாடுடைய நம்பெருமான் என்று சம்பந்தப் பெருமானும் தனது திருநள்ளாறு (போகமார்த்த பூண்முலையாள்) பதிகத்தில் குறிப்பிடுவது இங்கே நினைவு கூறத்தக்கது.

Advertisement

பொழிப்புரை:

ஒவ்வொரு ஊழிக் காலத்தின் தொடக்கத்திலும் இறைவன் படைக்கும் உயிரினங்கள் ஏழு வகைப் பட்டன. அவர் படைத்தவை ஏழு கடல்கள், அவர் ஆட்சி செய்வன ஏழு உலகங்கள். அவர் தோற்றுவித்த இசை ஏழு வடிவங்கள் உடையவை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.