108. மறம் பய மலைந்தவர்- பாடல் 2
கங்கை வெள்ளத்தை
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:15 PM
பாடல் 2:
விரித்தனை திருச்சடை அரித்து ஒழுகு வெள்ளம்
தரித்தனை அது அன்றியும் மிகப் பெரிய காலன்
எருத்து உற உதைத்தனை இலங்கிழை ஓர் பாகம்
பொருந்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்
விளக்கம்:
Advertisement
எருத்து=கழுத்து; இலங்கு=விளங்கிய; கருத்தினை=கருத்தை உடையாய்;
பொழிப்புரை:
விரித்த சடையை உடையவனாய் பெருகி வந்த கங்கை வெள்ளத்தை சடையில் தாங்கியவனும், அதிகமான வலிமை வாய்ந்த காலனின் கழுத்து ஒடிந்து வருந்தி கீழே விழும் வண்ணம் உதைத்து வீழ்த்தியவனும், அழகுடன் விளங்கும் நகைகளை அணிந்துள்ள உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் பொருத்தும் கருத்து உடையவனாக விளங்கி செயல்படுத்தியவனும் ஆகிய பெருமான் புறம்பயம் தலத்தில் அமர்ந்துள்ளான்.