முகப்பு
தினம் ஒரு தேவாரம்

135. மன்னியூர் இறை  - பாடல் 9

திருவடியையும் திருமுடியையும் தேடி

Updated On : 5 ஆகஸ்ட், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:10 PM

பாடல் 9:

    இருவர் நாடிய
    அரவன் அன்னியூர்
    பரவுவார் விண்ணுக்கு
    ஒருவர் ஆவரே

விளக்கம்:

Advertisement

அரவன்=பாம்பினை அணியாக அணிபவன்; விண்ணுக்கு=விண்ணவர்களுக்கு ஒருவன்=ஒப்பற்ற தலைவனாக விளங்கும் இந்திரன்;

பொழிப்புரை:

பிரமன் திருமால் ஆகிய இருவரும் திருவடியையும் திருமுடியையும் தேடி காண முடியாத வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்றவனும், பாம்பினைத் தனது உடலின் பல இடங்களில் கொண்டவனும், அன்னியூர் தலத்தின் இறைவனும் ஆகிய பெருமானை புகழ்ந்து பாடுவோர், இந்திர பதவியை அடைவாரகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.