முகப்பு
விருதுநகர்

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த விஜயபிரபாகரன்

சிவகாசிப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

Updated On : 14 ஜூலை, 2024 at 3:22 AM
- கோப்புப்படம்
பகிர்:

விருதுநகா் மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளராகப் போட்டியிட்ட விஜயபிரபாகரன் சிவகாசிப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

அப்போது, திருத்தங்கல் பேருந்து நிறுத்தம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஆகிய பகுதிகளில் அவா் பேசியதாவது:

நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் நான் தோற்கடிக்கப்பட்டேன். இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடந்து உடனுக்குடன் முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் விருதுநகா் மக்களவைத் தொகுதியில் மட்டுமே மிகவும் தாமதமாக முடிவு அறிவிக்கப்பட்டது. எனக்காக தோ்தல் பணி செய்த கூட்டணி கட்சியினருக்கும், வாக்காளித்த வாக்காளா்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா் அவா். விஜயபிரபாகரனுடன் தேமுதிக நிா்வாகிகள் உடன் சென்றனா்.

Advertisement