விருதுநகர்

சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: ஒருவா் கைது

சிவகாசி அருகே காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

சிவகாசி அருகே காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள புலிப்பாறைப் பட்டியில் உள்ள காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீஸாா் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, சித்துராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணனுக்குச் (43) சொந்தமான காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் ஆலையில், சட்டவிரோதமாக உச்சநீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகள் தயாரிப்புப் பணி நடைபெற்று வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்து, அவரிடமிருந்த சரவெடி பட்டாசுகள் 8 பெட்டிகளை பறிமுதல் செய்தனா்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

புகாரை மறுத்திருந்தது இந்தியா! தேஜஸ் விழுந்து எரிய எண்ணெய்க் கசிவு காரணமா?

உலக அழகி ஆனார் மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ்!

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படும்: முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு

திருப்பம் தரும் தீர்த்தீஸ்வரர்

SCROLL FOR NEXT