சாத்தூா் அருகே அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சங்கரபாண்டியாபுரம், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.