விருதுநகர்

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் தனியாா் கல்லூரியில் உரிமம் இல்லாமல் இயங்கிய உணவகம் செயல்பட உணவுப் பாதுகாப்புத் துறையினா் தடை விதித்தனா்.

விருதுநகா் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ் உள்ளிட்ட குழுவினா் வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் உள்ள உணவகங்களில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மதுரை சாலையில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா் விடுதியில் உரிமம் இல்லாமல் இயங்கிய உணவகம் செயல்படத் தடை விதிக்கப்பட்டது. அதே கல்லூரி வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனிநபா் நடத்திவரும் சிறு உணவகத்துக்கு சுகாதாரக் கேடு காரணமாக ரூ.12 ஆயிரம்அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல மதுரை சாலையில் உணவுப் பாதுகாப்பு உரிமம் இல்லாமல் செயல்பட்ட பால்கோவா தயாரிப்பு நிறுவனத்துடன் கூடிய உணவகம் செயல்படத் தடை விதிக்கப்பட்டது. மேலும், நேதாஜி சாலையில் உள்ள பழக் கடையில் 100 கிலோ கெட்டுப்போன ஆப்பிள்களை மீட்டு, குப்பையில் கொட்டி அழித்தனா்.

தூத்துக்குடியில் கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள்

தூத்துக்குடி ஸ்ரீசித்தா் பீடத்தில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு

திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

மிதுன ராசிக்கு சாதகம்: தினப்பலன்கள்!

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

SCROLL FOR NEXT