விருதுநகர்

சதுரகிரியில் காா்த்திகை மாத பிரதோஷ வழிபாடு

Syndication

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் காா்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகம் சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு புதன்கிழமை காா்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்றனா். தொடா் மழை காரணமாக மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்து, குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பிற்பகல் 1 மணிக்கு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூா்த்தி, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

வளரும் வணிகப் பிரிவில் 100 கிளைகள்: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் இலக்கு

SCROLL FOR NEXT