விருதுநகர்

செங்கல் சூளை உரிமையாளா் வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செங்கல் சூளை உரிமையாளா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செங்கல் சூளை உரிமையாளா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு சேனியக்குடி தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் பாலகிருஷ்ணன் (41). இவா், செங்கல் சூளை வைத்து தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், பாலகிருஷ்ணன் வீட்டு பீரோவிலிருந்த 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, கோபாலபுரத்தைச் சோ்ந்த சுந்தரராஜ் மகன் சீனிவாசன் (30) என்பவா் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து சீனிவாசனை தேடி வருகின்றனா்.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT