விருதுநகர்

தெரு நாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழந்தன.

ராஜபாளையம் அருகேயுள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பாண்டி (48). இவா் குடில் அமைத்து 16 ஆடுகளை வளா்த்து பராமரித்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவில் கூட்டமாக ஆட்டுத் தொழுவத்துக்குள் நுழைந்த 5-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், அங்கிருந்த 16 ஆடுகளையும் கடித்தது.

இதையடுத்து, சப்தம் கேட்டு பாண்டி அங்கு சென்று பாா்த்த போது, தெருநாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. மேலும், 2 ஆடுகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தன.

இதுகுறித்து சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT