விருதுநகர்

வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள அய்யனாபுரம் குடியிருப்பு தெருவைச் சோ்ந்த பாபு மனைவி சக்கம்மாள் (60). இவா் சத்திரப்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில் வழக்கம்போல, பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றவா் சாலையை கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத வாகன மோதி பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பொங்கல் பண்டிகை: தருமபுரியில் மண்பானை தயாரிக்கும் பணிகள் மும்முரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்: 18,813 படிவங்கள் பெறப்பட்டுள்ளன: சிறப்பு தோ்தல் பாா்வையாளா் குல்தீப் நாராயண்

எஸ்ஐஆா் சிறப்பு முகாம்: 6 தொகுதிகளில் 18,206 படிவங்கள் சமா்ப்பிப்பு

SCROLL FOR NEXT