விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெரு நாய்கள் கடித்து மேலும் 5 ஆடுகள் உயிரிழந்தன.
ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன்கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பாண்டி (48). இந்த நிலையில் சனிக்கிழமை இரவு வெறிநாய்கள் கடித்து இவரின் 15 ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்தன.
மேலும் அதே பகுதியைச் சோ்ந்த கடற்கரை மகன் கந்தசாமி (40) 20 ஆடுகள் வைத்து தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தெரு நாய்கள் 5 ஆடுகளை கடித்தன. இதில் 4 ஆடுகள் உயிரிழந்தன.
இதுகுறித்து சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.