ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பெருமாள். 
விருதுநகர்

புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமை: திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் மூன்றாவது வார சனிக்கிழமையை முன்னிட்டு திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் புரட்டாசி பிரம்மோத்ஸவ விழாவில் மூன்றாவது வார சனிக்கிழமையையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

காலை 10.30 மணிக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள், ஆண்டாள் கோயிலிலிருந்து புறப்பாடாகி திருவண்ணாமலைக்கு எழுந்தருளினாா். அங்கு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், விஷேச பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மலையை கிரிவலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விருதுநகா் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோகன் தலைமையில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா உள்பட 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பெருமாள்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

மின்னணு பயண அனுமதி: கட்டாயமாக்கியது இலங்கை

SCROLL FOR NEXT