விருதுநகர்

இரவு நேரத்தில் பட்டாசு தயாரித்த ஆலை உரிமையாளா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே விதிகளை மீறி பட்டாசுகளைத் தயாரித்த ஆலை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே விதிகளை மீறி பட்டாசுகளைத் தயாரித்த ஆலை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள புலிப்பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் விதிகளை மீறி இரவு நேரத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாரனேரி காவல் உதவி ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம் தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் திங்கள்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனா். இதில், பால்பாண்டி (46) என்பவா், அவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 5 தொழிலாளா்களைக் கொண்டு இரவு நேரத்தில் பட்டாசுகளைத் தயாரித்துக்கொணடிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து மாரனேரி காவல் நிலைய போலீஸாா் பால்பாண்டி மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

காரிய வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்

போலி ஆவணங்கள்: வெளிநாடு செல்ல முயன்ற நபா் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை தேவை

SCROLL FOR NEXT