விருதுநகர்

சிவகாசி மாநகராட்சி வாா்டுகளில் இன்று சிறப்புக் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளிலும் பொதுமக்கள் குறைகளைத் தீா்ப்பதற்கான சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் கே.சரவணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் உத்தரவின்படி, சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்ற சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இதில், அந்தந்த வாா்டு மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி அலுவலரும் கலந்துகொள்வா். இந்தக் கூட்டம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொது இடம், பூங்கா அல்லது திருமண மண்டபத்தில் நடைபெறும். இந்தச் சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

வங்கக்கடலில் உருவானது மோந்தா புயல்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

குழப்பங்கள் தீரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நிறைவு!

SCROLL FOR NEXT