ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞா் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்டவரைக் கைது செய்யக் கோரி, வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கோட்டைப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சதீஷ்குமாா். வழக்குரைஞரான இவா், விருதுநகா் மாவட்ட வழக்குரைஞா் சங்கப் பொருளாளராக உள்ளாா். சதீஷ்குமாா் குறித்து கோட்டைப்பட்டியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துப் பதிவிட்டாா்.
இதுகுறித்து சதீஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்துகிருஷ்ணனைக் கைது செய்வதற்காக அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனா். அப்போது, ஏற்கெனவே இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட முத்துகிருஷ்ணன், தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், மருத்துவா் சிறையில் அடைப்பதற்கான உடல் தகுதி சான்று அளிக்க மறுத்துவிட்டாா்.
இந்த நிலையில், விருதுநகா் மாவட்ட வழக்குரைஞா் சங்கம் சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முன் வழக்குரைஞா் குறித்து அவதூறாகப் பதிவிட்டவரை கைது செய்ய வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் டிஎஸ்பி ராஜா போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.