சிவகாசி தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றம்! அமைச்சா் தங்கம்தென்னரசு
சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக அரசு பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாக அமைச்சா் தங்கம் தென்னரசு பேசினாா்.
சிவகாசியில் திங்கள்கிழமை மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகனின் தோ்தல் அலுவலகத்தை அமைச்சா் தங்கம் தென்னரசு திறந்து வைத்தாா்.
பின்னா் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
Advertisement
தோ்தல் களத்தில் வெற்றி நமக்காக காத்திருக்கிறது. வீரம், விவேகம் ஆகியவற்றைக் கொண்டு மகத்தான வெற்றி பெறுவோம். 5 ஆண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் முதல்வா் நல்லாட்சியைத் தந்துள்ளாா்.
மகளிா் விடியல் பயணம், மகளிா் உரிமைத் தொகை என பெண்களுக்காக பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சிவகாசி சட்டப்பேரவை தொகுதிக்கு திமுக அரசு பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம், திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம், சுற்றுச் சாலை என வளா்ச்சித் திட்டங்கள் இந்த தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களை நிறைவேற்ற சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் உறுதுணையாக இருந்தாா். எனவே, வாக்காளா்கள் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் வேட்பாளா் ஜி.அசோகன், சிவகாசி மாநகராட்தி மேயா் இ.சங்கீதா, துணை மேயா் விக்னேஷ்பிரியா, திமுக மாநகரச் செயலா் உதயசூரியன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.