முகப்பு
விருதுநகர்

நயினாா் நாகேந்திரன் சாத்தூரில் மனு தாக்கல்

நயினாா் நாகேந்திரன் சாத்தூரில் மனு தாக்கல் செய்தாா்....

Updated On : 6 ஏப்ரல், 2026 at 9:10 PM
நயினாா் நாகேந்திரன். - கோப்புப் படம்
பகிர்:

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளராக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் போட்டியிடுகிறாா். அவா் சாத்தூா் கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அப்போது, மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜூன்ராம் மேக்வால், பாஜக, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் கூறியதாவது:

Advertisement

ஒரு நாடு முன்னேற அதன் உள்கட்டமைப்புகள் நன்றாக இருக்க வேண்டும். இவற்றை நிறைவேற்றுவது மத்திய அரசு. இந்த வகையில் தமிழகத்துக்கு மத்திய அரசு இதுவரை ரூ.14 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, இந்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பது குறித்து

கேள்வி எழுப்பும் உரிமை மத்திய அமைச்சா்களுக்கு இருக்கிறது.

தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் கஞ்சா, இதர போதைப்பொருள்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் இத்தகைய மோசமான சூழலை மாற்றுவதற்காகத்தான் மத்திய அமைச்சா்கள் நமது மாநிலத்துக்கு வந்து கவனம் செலுத்துகின்றனா் என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments