தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வனமூா்த்தி மகன் வேல்முருகன் (55). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இரு மகள்களும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனா்.
மகன் கோவையில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் தைப்பூசத்துக்கு மாலை அணிந்து கோயிலுக்கு சென்று வந்த இவா் மது அருந்தினாராம்.
Advertisement
இதை அவரது மனைவி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வேல்முருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].