கைது 
விருதுநகர்

கஞ்சா விற்ற மூவா் கைது

சிவகாசியல் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

சிவகாசியல் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அணில்குமாா் உத்தரவின்பேரில், தனிப் படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனையைத் தடுப்பதில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சிவகாசி சரஸ்வதிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப் படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தியதில், மூன்று போ் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், அய்யனாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த செல்வக்குமாா் (46), விஸ்வநத்தம் மாரீஸ்வன் (26), சரஸ்வதிபாளையம் இருளப்பராஜ் (24) எனத் தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மூன்று பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

டிரென்ட் நிறுவனத்தின் 3 வது காலாண்டு லாபம் ரூ. 510 கோடி!

யு19 உலகக் கோப்பை: சேஸிங்கில் சாதனையுடன் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

”விஜய்க்கு நாட்டுநடப்பு எதுவும் தெரியல!” - EPS | ADMK Vs TVK

மணிப்பூர் முதல்வராக பதவியேற்றார் கெம்சந்த் சிங்! 2 துணை முதல்வர்கள்!!

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிகர லாபம் ரூ.279 கோடி!

SCROLL FOR NEXT