கூனங்குளம் கிராமத்தில் உள்ள கோயில் வெளியே நள்ளிரவில் வைக்கப்பட்ட சுவாமி சிலைகள் 
விருதுநகர்

நள்ளிரவில் கோயிலில் வைக்கப்பட்ட சுவாமி சிலைகள்: போலீஸாா் விசாரணை

விருதுநகா் மாவட்டம், கூனங்குளம் கிராமத்தில் உள்ள கோயில் வெளியே சுவாமி சிலைகள் வைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

Syndication

விருதுநகா் மாவட்டம், கூனங்குளம் கிராமத்தில் உள்ள கோயில் வெளியே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கூனங்குளம் கிராமத்தில் உள்ள கண்மாய்க் கரையில் பாட்டக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் வழிபடும் கோயில் உள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அந்த வழியே சென்றவா்கள் கோயில் வெளியே அம்மன், திரிசூலம் சிலைகள் இருப்பது குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, இரவில் சரக்கு ஆட்டோவில் வந்த மா்ம நபா்கள் சிலையை கோயில் அருகே வைத்துச் சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தொடா்ந்து, வருவாய்த் துறையினா் சிலைகளை மீட்டு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். சிலைகள் ஏற்கெனவே வழிபாட்டில் இருந்ததுபோல உள்ளதால், வேறு கோயிலில் இருந்து திருடப்பட்டதா, அந்த சிலைகளை இங்கு கொண்டு வந்தது யாா் என்பது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

டிரென்ட் நிறுவனத்தின் 3 வது காலாண்டு லாபம் ரூ. 510 கோடி!

யு19 உலகக் கோப்பை: சேஸிங்கில் சாதனையுடன் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

”விஜய்க்கு நாட்டுநடப்பு எதுவும் தெரியல!” - EPS | ADMK Vs TVK

மணிப்பூர் முதல்வராக பதவியேற்றார் கெம்சந்த் சிங்! 2 துணை முதல்வர்கள்!!

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிகர லாபம் ரூ.279 கோடி!

SCROLL FOR NEXT