கோப்புப் படம் 
விருதுநகர்

தீயணைப்பு வீரா்களுக்கு குடியிருப்புகள்

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள தீயணைப்பு, மீட்புப் பணி நிலைய அலுவலா்கள், பணியாளா்களுக்கு ரூ.6.15 கோடியில் கட்டப்பட்ட 32 குடியிருப்புகளை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

சிவகாசியில், கடந்த 2023-ஆம் ஆண்டு ரூ.1.56 கோடியில் தீயணைப்பு, மீட்புப் பணி நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதே ஆண்டில் அலுவலா்களுக்கும், பணியாளா்களுக்கும் குடியிருப்புகள் கட்ட ரூ.6.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு நிலைய வளாகத்தில் 32 குடியிருப்புகள் கட்டப்பட்டன.

இவற்றை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதையொட்டி, சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன், மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா, மாவட்டத் தீயணைப்பு அலுவலா் புளுகாண்டி, உதவி அலுவலா் தாமோதரன், சிவகாசி நிலைய அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT