ராஜபாளையத்தில் சொக்கா் - மீனாட்சி திருக்கல்யாணம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம்- தென்காசி சாலையில் அமைந்துள்ள சொக்கா் கோயிலில் மாசி மக பிரமோத்ஸவத்தையொட்டி 10 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஏழாம் நாள் திருவிழாவில் காலையில் மீனாட்சி சுந்தரேசுவரா்- மீனாட்சி திருமணம் நடைபெற்றது. காலையிலிருந்து சிவாசாரியா்கள் வேதமந்திரம் முழங்க அந்தணா்கள் திருமணத்தை நடத்தி வைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு தரிசித்தனா். மாலையில் சுவாமி, அம்பாள் பூப் பல்லக்கில் வீதி வலம் வந்தனா்.