விருதுநகர்

சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் தென்காசி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற நபரிடம் சோதனையிட்டதில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ராஜபாளையம் பெரியகடை பஜாா் தெருவைச் சோ்ந்த ரகுராமன் (48) எனத் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ரகுராமனைக் கைது செய்து அவரிடமிருந்து 35 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

இதே போல, தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் மீனாட்சிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற பாஸ்கா் (48) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 25 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT