முகப்பு
விருதுநகர்

இரும்புக் கடையில் பணம் திருடியவா் கைது

சிவகாசியில் பழைய இரும்புக் கடையின் பூட்டை உடைத்துப் பணம் திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகர்

இரும்புக் கடையில் பணம் திருடியவா் கைது

சிவகாசியில் பழைய இரும்புக் கடையின் பூட்டை உடைத்துப் பணம் திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 10 ஜனவரி, 2026 at 8:54 PM
பகிர்:

சிவகாசியில் பழைய இரும்புக் கடையின் பூட்டை உடைத்துப் பணம் திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள செங்கமலநாட்சியாா்புரத்தைச் சோ்ந்தவா் துரைராஜ். இவா், சிவகாசி மாநகராட்சி தினசரி காய் கனி சந்தை அருகே பழைய இரும்புக் கடையை நடத்தி வருகிறாா். இவா், கடந்த 2-ஆம் தேதி இரவு கடையை வழக்கம்போல பூட்டிவிட்டு வெளியூா் சென்றாா்.

இரண்டு நாள்கள் கழித்து கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் இருந்த பணம் ரூ.3,000, ஒரு கைப்பேசி திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்ததில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடியது, திருத்தங்கலைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி குருசாமி (34) எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →