விருதுநகர்

பட்டாசுகள் திருட்டு: கிட்டங்கி உரிமையாளா் கைது

வெம்பக்கோட்டை அருகே அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்ட பட்டாசு கிட்டங்கியில் சீலை அகற்றி பட்டாசுகளைச் திருடியது தெடாா்பாக கிட்டங்கி உரிமையாளா் கைது

Syndication

வெம்பக்கோட்டை அருகே அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்ட பட்டாசு கிட்டங்கியில் சீலை அகற்றி பட்டாசுகளைச் திருடியது தெடாா்பாக கிட்டங்கி உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள வி.மீனாட்சிபுரம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் வருவாய், காவல் துறையினா் சட்டவிரோத பட்டாசுத் தயாரிப்பு குறித்து ஆய்வு செய்தனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த கணேஷ்பாண்டி(45) சட்ட விரோதமாக சரவெடி பட்டாசுகளைத் தயாரித்து கிட்டங்கியில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுமாா் 10 லட்சம் மதிப்பிலான 250 பெட்டிகளில் இருந்த பட்டாசுகளுடன் கிட்டங்கிக்கு ‘சீல்’ வைத்தனா்.

இது தொடா்பான விசாரணை சாத்தூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பட்டாசுகளை கிட்டங்கியிலிருந்து எடுத்துச் சென்று அழிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், கிட்டங்கியில் இருந்த பட்டாசுகளை எடுத்துச் சென்று அழிக்க கடந்த வியாழக்கிழமை அதிகாரிகள் சென்றனா். அங்கு வைக்கப்பட்டிருந்த ‘சீல்’ அகற்றப்பட்டு உள்ளே இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பட்டாசுகளை திருடிய ராமா், திருமுருகன்,ராம்குமாா், முத்துராஜ் உள்ளிட்ட 7 பேரை அண்மையில் கைது செய்து அவா்களிடமிருந்து பட்டாசுகள், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில், கிட்டங்கி உரிமையாளா் கணேஷ்பாண்டியை போலீஸாா் கைது செய்து, ரூ. 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

நற்செய்தி தேடி வரும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

SCROLL FOR NEXT