கொலை கோப்புப் படம்
விருதுநகர்

மனைவியைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளி கைது

சிவகாசி அருகே மனைவியைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

சிவகாசி அருகே மனைவியைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி - சாத்தூா் சாலை சிவகாமிபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஜோசப் என்ற ஜெகநாதன் (60). இவரது, மனைவி தங்கவேலம்மாள் (57). இவா், அதே பகுதியிலுள்ள பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்தாா். ஜோசப் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வந்த ஜோசப், மனையுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை அடித்துக் கொலை செய்தாா்.

தவலறிந்து வந்த போலீஸாா் தங்கவேலம்மாளின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்த சிவகாசி கிழக்கு போலீஸாா் ஜோசப்பை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT