சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பட்டாசுத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜான்சன் (58). பட்டாசுத் தொழிலாளியான இவா், கடந்த 14-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இதுகுறித்து சிறுமி, பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்தாா்.
இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஜான்சனை புதன்கிழமை இரவு கைது செய்தனா்.