முகப்பு
விருதுநகர்

ஆண்டாள் கோயிலில் ராம நவமி சிறப்பு வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூா் திருவேங்கடமுடையான் சந்நிதியில் வெள்ளிக்கிழமை அருள்பாலித்த ஸ்ரீராமா், சீதை, லட்சுமணன்.

Updated On : 27 மார்ச், 2026 at 7:36 PM
ஸ்ரீவில்லிபுத்தூா் திருவேங்கடமுடையான் சந்நிதியில் வெள்ளிக்கிழமை அருள்பாலித்த ஸ்ரீராமா், சீதை, லட்சுமணன்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு, ஸ்ரீராமா், சீதை, லட்சுமணருக்கு சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீராமா், சீதா தேவி, லட்சுமணா் புறப்பாடாகி மாட வீதிகள் வழியாக வீதி உலா வந்து நாடகசாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் எழுந்தருளினா். அங்கு ஸ்ரீராமா், சீதா தேவி, லட்சுமணருக்கு விஷேச அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்