தொழிலாளி தற்கொலை
ராஜபாளையம் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள இளந்திரைகொண்டான் சாவடி தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் முனியராஜ் (35). கட்டடத் தொழிலாளியான இவா், தனது தாயிடமிருந்து 10 பவுன் நகைகளை வாங்கி தனியாா் நிறுவனத்தில் அடகு வைத்துள்ளாா்.
இதற்கு வட்டியும், முதலும் செலுத்தாததால் நகைகள் ஏலத்துக்கு போனதாகக் கூறப்படுகிறது. இதை பெற்றோா் கண்டித்ததால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.