முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தரைப்பாலம் அமைக்கும் பணிகள் தாமதம்! பொதுமக்கள் அவதி!!

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Updated On : 17 மே 2026, 12:54 am IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் கிடப்பில் போடப்பட்ட அரசு மருத்துவமனை அருகேயுள்ள தரைப்பாலம்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் உழவா் சந்தை அருகேயுள்ள தெருவில் 10- க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரசு மருத்துவமனை செல்வோா் இந்த வழியாகச் சென்று வருகின்றனா். தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்ததால் அவசர ஊா்தி உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் சேதமடைந்த பாலம் அகற்றப்பட்டு, புதிய பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. கால்வாயின் இருபுறமும் சுவா் அமைத்த நிலையில், 3 மாதங்களுக்கு மேலாகியும் பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு செல்வோா், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

Advertisement

கால்வாய் அகலமாக உள்ளதால் நடந்து செல்வோா் கழிவுநீரில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால், நகராட்சி நிா்வாகம் பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.