தினமணி கதிர்

இலக்கியக் காட்சிகள்: அன்று வந்ததும் இதே நிலா...

ஆண்டுகள் ஆயிரம், ஆயிரம் கடந்தாலும் அணங்குகள் அங்கவையும், சங்கவையும் கண்கள் கலங்கிய கையறு நிலையில் இருந்து பாடிய துன்பம் தோய்ந்த புறநானூற்று வரிகளின் சித்திரமாய் விளங்கும் இக் கொடிய காட்சி காண்போரை மட்

டி.எஸ். தியாகராசன்

ஆண்டுகள் ஆயிரம், ஆயிரம் கடந்தாலும் அணங்குகள் அங்கவையும், சங்கவையும் கண்கள் கலங்கிய கையறு நிலையில் இருந்து பாடிய துன்பம் தோய்ந்த புறநானூற்று வரிகளின் சித்திரமாய் விளங்கும் இக் கொடிய காட்சி காண்போரை மட்டுமல்ல, கேட்போரையும் கண்ணீர் சிந்த வைக்கும்.

வள்ளல் பாரி மூவேந்தர்களால் வஞ்சகமாய் கொலையுண்ட பின், அந்நாட்டு இளவரசிகள் அபலைகள் ஆனார்கள். ஒரு திங்கள் காலம் கடந்த பின் ஓர் இரவில் முழுநிலா நாளில் திங்களை நோக்குகிறார்கள் அக் கன்னியர்கள். கடந்த திங்களின் காலத்தில் இருந்த அவர்தம் நிலையினை எண்ணிப் பார்க்கிறார்கள்.

இதே வான்வெளி. அதே நிலா. அதே ஒளி மிகுந்த முழு வெண்நிலாவில் நாங்கள் எங்கள் தந்தையைப் பெற்றிருந்தோம். எங்களின் பறம்பு மலையும் எங்கள் வசமே! எவரும் வென்றிருக்க இல்லை. ஆனால், இன்றைய இந்த முழு நிலாவின்போது எமக்கு உரிமையான குன்றினை இழந்தோம். பறம்பு மலை மன்னனாகிய எங்கள் தந்தை பாரியை இழந்தோம். முற்றுகை இட்டு இருந்த மூவேந்தரும் வஞ்சகமாக அல்லவா தந்தையைக் கொன்று நாட்டையும், கைக் கொண்டனர் என்று அந்த அபலைச் சகோதரிகள் கண்ணீர் உகுத்த நிலையில் உதிர்ந்த இவ்வரிகள்தான் புறநானூற்றுப் பாடலாக வருகிறது.

நம் முன்னோர் காதல், வீரம், ஈகை போன்ற நல்ல குணங்களால் புகழின் உச்சியில் வாழ்ந்து இருந்தாலும், சில நேரங்களில், அழுக்காறினால் விளைந்த பகை காரணமாக வீரம் செறிந்த, வள்ளன்மை மிக்க பாரி போன்ற மன்னர்களையும் வஞ்சகமாக, போர் நெறி தவறிக் கொன்று அழியாப் பழி கொண்டார்கள் என்ற வரலாறும், கொலையாளிகளின் பெயர்கள் வருங்கால சந்ததியினர்க்குத் தெரிந்தால் பெயர் சொல்லி தூற்றுவார்களே என எண்ணித்தான் கொலை புரிந்த மன்னர்களின் பெயர்களை வரலாறு பதிவு செய்யாமல் விட்டிருக்கிறதோ என எண்ணவும் தோன்றுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT