முகப்பு
தினமணி கதிர்

விந்தன் கூறிய குட்டிக் கதை

ஒருநாள் நாயிடம் ""உன்னைக் கண்டால் எனக்கு மட்டுமல்ல... மனிதர்களுக்குக்கூடப் பொறாமையாய் இருக்கிறது'' என்றது பூனை.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:10 AM
பகிர்:

ஒருநாள் நாயிடம் ""உன்னைக் கண்டால் எனக்கு மட்டுமல்ல... மனிதர்களுக்குக்கூடப் பொறாமையாய் இருக்கிறது'' என்றது பூனை.

""ஏனாம்...?'' என்று கேட்டது நாய்.

""வாலை ஆட்டி ஆட்டிக் காட்டியே நீ பிழைத்துக் கொள்கிறாய் அல்லவா, அதனால்தான்!'' என்றது பூனை சிரித்துக்கொண்டே.

நாய் அதைத் திருப்பிக் கேட்டது...

""மனிதர்களில் சிலர் தலையை ஆட்டி ஆட்டிக் காட்டியே பிழைத்துக் கொள்கிறார்களே, அதற்கென்ன சொல்கிறாய், நீ''

பூனை வாயைத் திறக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.