கேள்வியின் நாயகன்!
கே.பாலசந்தர் பத்திரிகைகளுக்கு கேள்விகள் அனுப்பியவர் என்றால் ஆச்சரியமாயிருக்கிறதா.?
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:25 PM
கே.பாலசந்தர் பத்திரிகைகளுக்கு கேள்விகள் அனுப்பியவர் என்றால் ஆச்சரியமாயிருக்கிறதா.?
1941- 42 ஆம் ஆண்டுகளில் அண்ணா நடத்திய " திராவிட நாடு' வாரஇதழை தொடர்ந்து வாசித்த கே. பாலசந்தர்,பகுத்தறிவு இயக்க கொள்கைகளில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேள்விகளாக அனுப்புவார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள "நல்ல மாங்குடி' என்ற கிராமத்திலிருந்து பள்ளி மாணவராக கே.பாலசந்தர் அனுப்பிய கேள்விகளுக்கு அண்ணா கட்டுரையாக எழுதும் பதில்கள் வாரந்தோறும் திராவிட நாடு இதழில் வெளிவரும்.
(டி.வி.ராதாகிருஷ்ணன் எழுதிய "இயக்குநர் சிகரம்' கே.பி. என்ற நூலிலிருந்து)
Advertisement