இங்கிலாந்தில் சட்டம் படித்து பட்டம் பெற்று சிறந்த, வழக்குரைஞர், பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் என்ற பெயருடன் அப்போது இந்தியாவுக்கு திரும்பியிருந்தவர் கே.டி.கே தங்கமணி. இந்திய மாணவர்களில் - மோகன் குமாரமங்கலம், பார்வதி, என்.கே. கிருஷ்ணன், ரேணு சக்கரவர்த்தி உட்பட பலரும் அரசியலில் பங்கெடுத்து வந்தனர்.
சட்டம் படித்தபோது கே.டி.கே. அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை. கல்லூரியில் சிறந்த விளையாட்டு வீரராக மட்டுமே கருதப்பட்டார். இங்கிலாந்து கால்பந்து குழுவில் விளையாட அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அந்தக் குழுவோடு அவர் ஸ்பெயினை எதிர்த்து கால் பந்தாட்டப் போட்டியில் ஆக்ஸ்போர்டு மாணவர்களுக்காக பந்தாடப் போன குழுவில் அங்கம் பெற்றிருந்தார்.
தா.பாண்டியன் எழுதிய "படுகுழிக்குள் பாரததேவி' என்ற நூலிலிருந்து