- பேதை, பொதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எனப் பெண்களின் பருவம் 7.
- பூப்படைந்த பெண் ஏழு நாட்கள் கழித்து நன்னீராடி வீடு புகுவாள்.
- மணமாகும்போது கணவனின் கைபிடித்து ஏழு அடிகள் எடுத்து வைத்து அக்கினியை வலம் வருவாள்.
- கருவுறும்போது ஏழாவது மாதம் குழந்தை முழு வளர்ச்சி பெறுகிறது.
- பிறக்கும் குழந்தைக்கு ஏழாவது நாள் தொப்புள் கொடி விழுகிறது. ஏழாவது மாதம் பல் முளைக்கிறது.
- பெண்களின் வாழ்க்கையில் ஏழுக்கு இவ்வளவு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
"தகவல் களஞ்சியம்'நூலிலிருந்து