""தம்பி... ஏன்டா அழறே ?''
""பத்து ரூபாய் கொடுத்தால்தான் சொல்லுவேன்''
""சரி அழாதே... இந்தா பத்து ரூபாய். இப்ப சொல்லு... ஏன் அழுதாய் ?''
""பத்து ரூபாய் வேணும்னுதான் அழுதேன்''
""மனைவியை அதிகாரம் செய்யும் உரிமை கணவனுக்கு உண்டா ?''
""உரிமை உண்டு. தைரியம் உண்டா ?''
அசோக் ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
ஆசிரியர் : கண்பார்வை யாருக்கு அதிகம்?
விலங்குகளுக்கா, மனிதர்களுக்கா?
மாணவன் : விலங்குகளுக்குத்தான்
ஆசிரியர் : எப்படி?
மாணவன் : விலங்குகள் எதுவும் கண்ணாடி போடுறதில்லையே
கணவன் : சேலை கட்டியிருக்கும் போது மகாலட்சுமி மாதிரியே இருக்கே...
மனைவி : யாருங்க அந்த மகாலட்சுமி?
கணவன் : எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்
மனைவி : ???
ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்.